Saturday, June 28, 2008

பெருமையெல்லாம் தேடி வரும்

சென்னையிலே காந்தியார்க்கு வரவேற் பொன்றைச்
சீராகத் தருகின்றார் தமிழர் நாட்டார்
அன்னை கஸ்தூரஅவரும அருகிருக்க
அளக்கின்றார் மன்னரென்றும் ராணியென்றும்
சொன்னதெல்லாம் கேட்டு நொந்த காந்தியாரும்
சொல்லுகின்றார் பதிலினிலே உண்மைகளை
என்னை யிங்கு புகழ்ந்ததிலே வெட்கம் கொண்டேன்
எள்ளளவும் உண்மையில்லை மாற்றிக் கொள்க

நாரா யண சாமி நாகப்பன் என்ற இரு
நல்ல தமிழ் நாடு பெற்ற இளைஞரவரோடு
போராடி நாட்டிற்காய்ச் சிறைக்குள்ளே நொந்து
பொலிவிழந்து நோய் கொண்டு உயிர் துறந்து நின்ற
சீமாட்டிவள்ளி யம்மை அவள் செய்த தியாகம்
செப்பி அவர் தலையினிலே சூட்ட வேண்டும் மகுடம்
நீர் மாற்றி அதை எனக்குச் சூட்டிட முயன்றீர்
நெஞ்சார அவருக்கே சூட்டுகின்றேன் இதனை


மற்றவர் தம் உழைப்பதனைத் தன் உழைப்பாய்
மாற்றி அதில் குளிர் காயா மா மனிதன்
உற்றவரோ நண்பர்களோ எவரெனினும்
உண்மை விட்டால் உதறி விட்ட ஒர் புனிதன்
கற்றிடுவீர் அவன்தன்னை கற்று விட்டால்
கண்டிடுவீர் மனத்திற்குள் நிம்மதியை
பெற்றிடுவீர் அவன் வழியைப் பெற்று விட்டால்
பேசரிய பெருமையெல்லாம் தேடி வரும்

0 மறுமொழிகள்: