Tuesday, July 1, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

காதலனைப் பிரிந்து வெந்தாள் மங்கை நல்லாள்
கண்ணுறக்கம் கொள்ளவில்லை கண்ணீர் வேறு
சாதலுக்கு வழி உண்டா என்றால் அவன்
சரியாக மனத்துக்குள் அமர்ந்துளானே
பேதலித்துப் போன பெண்ணாள் பேசுகின்றாள்
பிரிவில் அழும் கண்களினைப் பார்த்து பார்த்து
நீர் தந்த நோய் தானே அவரைப் பார்த்து
நீர் வழிய அழுங்கள் எனக்கு இனிமை ஈது


குறள்
ஓ ஓ இனிதே எமக்கிந்நோய் செய்த கண்
தா அம் இதன் பட்டது

0 மறுமொழிகள்: