Thursday, July 10, 2008

நடிகர் திலகம 2

கண் நடிக்கும் என்றே நாம் பார்த்து நிற்போம்
கை நடிப்பைப் பார்ப்பதற்கு விட்டுப் போகும்
பண்ணிசைக்கு வாயசைக்க பார்த்திருந்தால்
பாடியது அவரேதான் என்று தோன்றும்
விண்ணவரின் வேடத்தில் அவரும் வந்தால்
விண்ணவர்க்கோ வியப்பினால் இமை துடிக்கும்
கண்ணவரே எங்களது திரைத் துறையின்
கடவுளே சிவாஜி கணேசனன்றோ

4 மறுமொழிகள்:

said...

கடலை, கடவுளே என்று கூறியது மட்டுமே சிறிது மிகையாகத் தோன்றுகிறது.

said...

இந்த மாதிரி புரவலர்கள் இன்னும் இருப்பது மனசுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

said...

மீண்டும் நன்றி ஐயா! வாழ்க நடிகர் திலகம் புகழ்!!

said...

திரைத் துறையின் கடவுள் எனத்தானே சொல்லியிருக்கிறார்.
இதிலென்ன ஐயம்!
அவர் திரைத் துறையின் கடவுள் தான்!
ஐயமே இல்லை!!