Wednesday, July 9, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

கலந்திருந்தான் கனிந்திருந்தேன் கைகள் தமக்கிடையில்
பிணைந்திருந்தேன் விட்டுப் பிரியாமை வேண்டி நின்றேன்
அலந்திருந்த காரணத்தால் அணைப்பதிலே சிறப்பளித்தேன்
அப்படியே மயங்கியதால் கூடலிலோ வென்றிருந்தேன்
பிரிந்து விட்டான் பேதையெனை உடல் நிறமும் மாறியது
பேசுகின்றார் ஊரார் என் மாற்றமதைப் பெரிதாக
துறந்து சென்ற அவனன்றோ துன்பமதை இழைத்தவன் காண்
தூற்றுகின்றார் அவனை விட்டு எனை என்ன நியாயமிது

குறள்
'பசந்தாள் இவள்' என்பது அல்லால்,இவளைத்
'துறந்தார் அவர்'என்பார் இல்

0 மறுமொழிகள்: