Thursday, July 3, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

பிரிந்து சென்ற காதலனைப் பேதைப் பெண்ணாள்
பெருமையுடன் மனத்திற்குள் வைத்து வைத்து
நினைந்தவனை அதனாலே வாழுகின்றாள்
நெஞ்சமதின் சிறப்பான உதவியுடன்
பெருந்தன்மை கொண்டவனாம் காதலனும்
பிதற்றுகின்றாள் பெண்ணவளும பித்தாய் ஆகி
தினம் தினமும் அவனையே நினைத்த போதும்
திருமகனோ கோபமின்றி அனுமதித் தானாம்

குறள்

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
காதலர் செய்யும் சிறப்பு

1 மறுமொழிகள்:

said...

இந்த நிலை இருபாலர்க்கும் பொதுவன்றோ தமிழ்க்கடலே!