Wednesday, July 16, 2008

பழம் பாடல் நாலடியார்

    சிவந்த வாய் அரக்காம்பல் நிறம் கொண்டாள் ,சீரழகு

        சிற்றிடை தனைக் கொண்டாள் மார்போடு போராட

  எவன் தன்னைக் கொண்டாளோ அவனோடு போய் விட்டாள்

       எவ்வழியில் பரற் கற்கள் நிறைந்துள்ள கான் வழியில்

 சிவப்பழகை  அவள அழகுச் சீரடிகள் தனில் பூச

       உவப்பேன் நான் பஞ்சு கொண்டே பூசிடுவேன் பின்னிழுப்பாள்

தவிப்பாள் அப்பஞ்சு படத் தாங்காமல் மெல்ல என்பாள்

     தாயல்ல செவிலித் தாய் புலம்பி நின்றாள் தனியாக

                                      நாலடியார்

     அரக்காம்பல் நாறும் வாய் அம்மருங்கிற் கன்னோ

     பரற்கானம் ஆற்றின கொல்லோ  -  அரக்கார்ந்த

    பஞ்சு கொண்டூட்டினும் பையெனப் பையெனவென்று

   அஞ்சிப்பின் வாங்கும் அடி

      

 

0 மறுமொழிகள்: