Sunday, July 27, 2008

பழம் பாடல் காளமேகம்

இறைவனையும் மனிதருடன் இணைத்துப் பார்க்கும்
இப்பெருமை காளமேகம் தனக்கே உண்டு
பிறை சூடி நிற்கின்ற பெம்மான் நந்தம்
பேரருளாம் சிவனிடம் தான் கேள்வி வைத்தான்
உறை கடலாம் பாற்கடலைக் கடைந்த போது
உடன் வந்த நஞ்சதனை உண்டு நின்ற
இறைவனிடம் கேட்கின்றான் இவனைப் போன்ற
இடக்கான புலவர் வேறு யாருமில்லை


நஞ்சருந்த வேண்டிய ஒரு நிலைக்கு சிவன்
நாடறிய வந்ததென்ன  என்று கேட்டான்
கொஞ்சமல்ல செல்வம் வெள் ளியில் மலையும்
கூடக் கொழிக் கின்ற பொன் மலையும்
அஞ்சல் என்று சொல்லி அவன் தன்னை விட்டு
அகலாத உமையம்மை உடனிருக்க
நஞ்சருந்த வேண்டிய ஒர் சூழ் நிலைக்கு
நாயகனார் வந்த்தென்ன  என்று கேட்டான்

பணமில்லாத் துன்பத்தில் நஞ்சருந்தும்
பழக்கம் உண்டு மனிதரிடம் இவர்தமக்கோ
அளவின்றி செல்வம் உண்டு மலைகளாக
அதனாலே நஞ்சருந்த வழியேயில்லை
துணையாலே துன்பம் வந்து மனிதர் சிலர்
தொலைந்தொழிந்து போக நஞ்சை யருந்திடுவார்
அணைந்தென்றும் பிரியாமல் அன்னையவர்
அருகிருக்க நஞ்சருந்தல் நியாயம்தானோ

வினை யாவும் தீர்க்கின்ற இறைவன் அவன்
விளையாட அளிக்கின்ற அன்பு வாய்ப்பில்
கணையாக் கேள்விகளைத் தொடுத்து நின்றான்
காளமேகம் எனும் பெரும் வம்பன் இவன்
தனியாகத் த்மிழன்னை இவனுக்கென்று
தந்து விட்ட பேரருளே காளமேகம்
கனியான பாடல் பல தந்து நின்றான்
களித்திடுவோம் நாம் அவ்னைக் கற்றுக் கற்று

காள்மேகம்

வள்ளலெனும் பெரிய மாயூர நாதருக்கு
வெள்ளி மலை பொன் மலையுமே யிருக்க-தெள்ளுமையாள்
அஞ்சல் அஞ்சல் என்று தினம் அண்டையிலே தானிருக்க
நஞ்சு தனை ஏன் அருந்தினார்

0 மறுமொழிகள்: