Wednesday, July 23, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

    விட்டு விட்டுச் சென்று விட்டார் காதலரும்

          வெறுத்திடவா முடிகிறது இல்லை இல்லை

   தொட்டவரின் பின்னாலே செல்வதொன்றே

         துடியிடையாள் எனை இங்கு வாழ வைக்கும்

  விட்டவரை விலகி இங்கு மானத்தோடே

        வெற்றி கொள்ள முடியாது காமம் நம்மை

  சுட்டு விடும் அதனாலே மானம் கொள்ளல்

        சுத்தமாய்ப் பெண்களுக்கு வேண்டாம் என்றாள்

                                         குறள்

   செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை காம நோய்

  உற்றார் அறிவது ஒன்று அன்று

1 மறுமொழிகள்:

said...

தங்கள் பதிவை இன்று தான் காணும் பாக்கியம் கிடைத்தது.

அருமை, மிக அருமை.