Sunday, July 27, 2008

ஒழித்தல் வேண்டும்

 மனைவியரைக் கொல்லுகின்றார் குழந்தைகளை
  மழலையரைக் கொல்லுகின்றார் அந்தோ பாவம்
  தனை மறந்துக் கொடுமைகளைச் செய்து நிற்கும்
  தனியான மனிதரினை என்ன செய்ய
  வினை வழியோ விதி வழியோ புரியவில்லை
  வீணர் இவர் தமைக் கண்டேன் பொறுக்கவில்லை
  புனை கதைகள் திரைக் கதைகள் கண்டு இங்கு
  போக்கொழிந்து போனாரே மனிதர் இவர்

  கொல்லுதற்கு வந்தவரா உந்தனது கூட்டாகிக்
  கொள்ளையினபம் தந்த மாதர்
  அள்ளுதற்கும் கொஞ்சுதற்கும் உந்தன் மீது
  அன்பு செய்து உனைத் தந்தையாக்குதற்கும்
  தெள்ளு தமிழ் மழலையரை உந்தன் பேரைத்
  தெரிய வைக்கத் தந்ததற்கும் முட்டாள் முட்டாள்
  கொல்லுதற்கா அழகவரை இறைவன் தந்தான்
  கொடும் பாவிக் கூட்டம் இதை ஒழித்தல் வேண்டும்

0 மறுமொழிகள்: