Thursday, July 10, 2008

பழம் பாடல் ஒளவையார் மூதுரை

சாதிகளாய் வேறு பட்டு மேலும் மேலும்
சங்கடங்கள் தனைச் சேர்த்து அழியும் மாந்தர்
வீதி தோறும் சங்கங்கள் தன்னைக் கொண்டு
வீணாக அழிகின்றார் அய்யோ பாவம்
சாதிகளா இரண்டேதான் உண்டு என்று
சாற்றுகின்றார் தமிழ்த் தாயாம் அவ்வையாரும்
நீதி நெறி தவறாமல் பொருளை யீட்டி
நெஞ்சாரப் பிறர்க்குதவி நிற்பார் தம்மை


பேதங்கள் இல்லாத பெரியார் என்றும்
பெரும்பொருளை தவறான வழியில் ஈட்டி
நீதி நெறி தவறியே வாழ்வார் தம்மை
நிலை குலைந்த மிகச் சிறியர் என்றும் சொல்லி
சாதி என்றால் மிகத் தெளிவாய்ச் சொல்லிச் சென்றார்
சத்தியத்தை உண்மையினை அவ்வைப் பாட்டி
ஆதியிலே சாதியில்லை இடையில் வந்த
அவமானம் தனை ஒழிப்போம் விரைந்து வாரீர்

மூதுரை

சாதியிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறி முறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்
பட்டாங்கிலுள்ள படி

0 மறுமொழிகள்: