Tuesday, July 15, 2008

பழம் பாடல் நாலடியார்

          கலந்து மகிழ்ந்தவன் தான் கணப் போதும்  பிரியாது

             இணைந்து  மகிழ்ந்தவன் தான் பொருள் தேடி   இன்றென்னை

        பிரிந்தே சென்றவுடன்  பேதையெனை இத்தனை பேர்

             இணைந்தே   கொல்லுகின்றார்  இது என்ன நியாயம் சொல்க

       விரைந்தே  கேட்கின்றாள் விரி விழியாள் அப்பப்பா 

           சிறந்தாள் முதல் குற்றம்  சிவனின் மேல் ஆம் அய்யா

      நிறைந்தான் எம்  மனதில் மன்மதனைக் கொன்ற சிவன்

          நிலையின்றி  மீண்டும் ஏன் உயிர்ப்பித்தான் மன்மதனை

    சிலை கொண்டு  என்னை இன்றும் சீர் குலைப்பான்  அப்பேதை

         சிவனாரின்   அன்பு இதைச் செப்பாமல் இருப்பேனோ

   குலை நடுங்க வைக்குதிங்கே குயில்  இதனின் குரலிங்கே

        கூடு கொண்ட  காகம் இதை அடை காத்துத் தந்ததனால்

  படையல்   வைத்த சோறுண்ட காகம் செய்த துரோகம் இது

       பார்  முழுதும் பாவையர்க்கு என்றென்றும் துரோகம்  தான்

   இடை இல்லாப்  பெண்களுக்கு இடையூறு செய்யும் நிலா

      இதை  விழுங்கி எங்களுக்கு இன்பம் தந்த இராகு அதும

    உடன் அதனை உமிழ்ந்தெங்கள் உயிர் பறிக்கச் செய்ததென்ன

        உலகெங்கும் பெண்களது  உயிர்த் துன்பம் அறியானோ

    இடம் நேரம் என்று  இங்கு எதுவுமே  கருதாமல்

       இடையூறாய் நிற்கின்ற  அன்னையவள்   செயல்  பார் நீ

    பட  படத்து நிற்கின்றாள்  பாவை யங்கே  தோழியிடம்

      பருத்த  முலைத் தோழி  என்று  பாவையங்கு அழைத்தது  ஏன்

  இளைத்த  முலையானதிங்காம் இவள் முலையும் பிரிவதனால்

     கொடுத்து  வைத்த  தமிழினத்தீர் கொள்க இந்தப் பாடலினை

                                        நாலடியார்

    கண் மூன் றுடையானும்   காக்கையும் பையரவும்

   என்னீன்ற  தாயும் பிழைத்ததென்   -        பொன்னீன்ற

  கோங்கரும்  பன்ன முலையாய்  பொருள்வயிற்

 பாங்கனார் சென்ற  வழி

      

1 மறுமொழிகள்:

said...

கொல்லுகின்ற்ர்
அதும
த.பிழை

//கண் மூன் றுடையானும் காக்கையும் பையரவும்//

இதற்கான 3 விளக்கங்கள் மிகச் சிறப்பு!