Monday, July 14, 2008

பழம் பாடல் நாலடியார்

   சிற்றிடையால் மார்பகத்தின் செழுமை ஒங்க

         சிரிப்பதனால் முல்லையெல்லாம் தோற்று ஒட

  கற்றையெனும் குழலதனால் மேகம் வாட

       கனி மொழியாள் நடக்கின்றாள் ஊரே பாட

 விற் புருவப் பெண்ணாளின் பின்னே சாடி

      விரைகிறதாம் மீன் கொத்திப் பறவை ஒன்று

 கொத்தி விட வேண்டும்  அந்தக் கயல்கள் ரெண்டை

     கொஞ்சு மொழிப் பெண்ணாளின்  கண்கள் தன்னை

 கண்கள் ரெண்டும் கயல்கள் என்று எண்ணி எண்ணி

         கவனமாய் பறக்கிறது பின்னாலேயே

 பெண்ணவளின் அருகினிலே சென்று உடன்

       பின் வாங்கி விண்ணோக்கிப் பறக்கிறது

 ஒன்றுமில்லை பெண்ணாளின் புருவம் அங்கே

       ஒளி வில்லாய்த் தெரிகிறது அச்சம் கொண்டு

  சென்று சென்று மீண்டும் அது வருகின்றது

      சேர்ந்தவனின் மனம் போலே ஆகா ஆகா

                                         நாலடியார்

  கண் கயல் என்னும் கருத்தினால் காதலி

 பின் சென்றது அம்ம அச் சிறு சிரல்  -  பின் சென்றும்

 ஊக்கியெழுந்தும் எறிகல்லா ஒண்புருவம்

கோட்டிய வில் வாக்கு அறிந்து

0 மறுமொழிகள்: