Thursday, July 17, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

   நன்றியில்லா நெஞ்சென்று  தன் நெஞ்சையே

          நங்கையவள் நினைக்கின்றாள் அழகு போங்கள்

  மன்னவனைப் பார்த்ததவள் கண்கள் தானாம் 

         மனதுக்கோ அதனால்தான்  பழக்கமானான்

  சின்னவனைத் தேடி இந்த நெஞ்சு மட்டும்

        சிறகடித்துப் பறக்கிறதாம் ஊர்கள் எங்கும்

  கண்களையும் அழைத்துச் செல்ல  வேண்டும் என்றே

      கை கூப்பி வேண்டுகின்றாள் நெஞ்சம் தன்னை

                                           குறள்

   கண்ணும் கொளச் சேறி நெஞ்சே   இவை என்னைத்

  தின்னும் அவர்க் காணலுற்று

     

1 மறுமொழிகள்:

said...

நெஞ்சோடு கண்ணங்கு செல்லுதற்கு கால்களன்றோ உதவவேண்டும்!

நெஞ்சு மட்டும் செல்லுதற்கு கால்களங்கு தேவையில்லை!

இருந்தாலும் குற்றமில்லை எல்லாமும்
கற்பனையே!

கண்பார்த்து நெஞ்சுண்டவன் மெய்யானால் நன்று!