Friday, July 25, 2008

பழம் பாடல் அவ்வையார்

   பாரம் தாங்காமல்    கற்றூண்  வளைவதுண்டோ

       படீரெனத் துண்டாகிக்  கீழே    விழுந்து  விடும்

  ஈர மனம் கொண்டு எல்லார்க்கும் உதவி நிற்கும்

       எப்போதும்   நல்லதையே   வாழ்க்கையெனக் கொண்டிலங்கும்

  வீர மனத்தார்க்குக் கேவலங்கள்   ஏற்படுத்த

        வீணர்களும்  முயற்சி செய்து  வெற்றி பெற நினைத்தாரேல்

  சோரம்   போவாரோ உயிர் துறப்பார் வெற்றி  கொள்வார்

        பாரத்தால் ஒடிந்த அந்தக் கற்றூணைப் போலத் தான்

                                      மூதுரை

    உற்ற இடத்தில் உயிர்   வழங்கும்  தன்மையோர்

   பற்றலரைக்  கண்டால் பணிவரோ==      கற்றூண்

  பிளந்திறுவதல்லால் பெரும் பாரந் தாங்கின்

  தளர்ந்து    வளையுமோ தான்

0 மறுமொழிகள்: