Wednesday, July 2, 2008

அளித்தனர்

இன்னும் நான் கற்கவில்லை என்பதை உணர்கின்றேன் ஆம்
எளியனாய் மீண்டும் மீண்டும் கற்றிட முயல்கின்றேன் நான்
அன்னையாம் தமிழோ என்னை அணைத்திங்கு ஆதரித்தாள்
அவள் பிள்ளை என்று சொல்லி ஆடினேன் பாடி நின்றேன்
மன்னவர் காலம் தொட்டு மக்களே தம்மைஆளும்
மாபெரும் வாய்ப்பைப் பெற்று மனம் போல ஆளும் நேரம்
சின்னவன் நானும் இங்கே சிறப்புடன் தமிழால் வாழ
அன்னையும் தந்தை தானும் அளித்தனர் என்னை இங்கு

0 மறுமொழிகள்: