Friday, July 11, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

   கரு விழியாள் தன்னழகில்  வீழ்ந்தேன்   வீழ்ந்தேன்  அந்தக்

           கனியிதழாள்  அமுத  நஞ்சில்   மாய்ந்தேன் மாய்ந்தேன்

   தருவதிலும்    பெறுவதிலும் வாழ்ந்தேன் வாழ்ந்தேன்  அந்தத்

           தளிர்க் கொடியாள் எனைப்  பிரிந்தாள் ஒய்ந்தேன் ஒய்ந்தேன்

   பெருமையுடன் நிமிர்ந்திருந்த ஆண்மை  ஊரார்

          பேசி நிற்கும் எந்தனது நாணம் என்னும்  

   இரு படகும் இழந்து   விட்டேன் அந்தோ காமம்

          எனும் பெரிய  வெள்ளத்தில்  நானும்  நானும்

                                             குறள்

    காமக் கடும்  புனல் உய்க்குமே நாணொடு

   நல் ஆண்மை என்னும் புணை

1 மறுமொழிகள்:

said...

பெண்ணென ஒருத்தி என்னிடம் வந்தாள்
என்னெனச் சொல்வேன் யானும் இங்கே
கண்ணென மதிக்கும் நாணம் துறந்தேன்
ஆண்மையும் சேர்த்திரு படகும் இழந்தேன்
காமம் என்னும் பெரிதொரு வெள்ளம்
என்னையும் கொண்டதை எப்படி உரைப்பேன்