Wednesday, July 9, 2008

பழம் பாடல் நாலடியார்

சீவி முடித்திட்ட சிங்காரத் தலையழகும்
சிறப்பாக உடுத்தி நிற்கும் ஆடையதன் பேரழகும்
பாவித்த மஞ்சளினால் பாவை கொள்ளும் நல்லழகும்
மேவியே நின்றாலும் மேன்மை அவர்க்கில்லை நல்ல
சீர் அளிக்கும் கல்வியெனும் நடுவு நிலை கொண்டிலங்கும்
செம்மாந்த பேரழகே அழகு என்று உணர்வீரே
ஊர் நிறைந்த தமிழினத்தீர் கல்வியெனில் நடுவு நிலை
உண்மையெனச் சொல்லுவது நாலடியின் சீரடிகள்


நாலடியார்

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு

0 மறுமொழிகள்: