Tuesday, July 8, 2008

பொதிகைத் தொலைக்காட்சி

அன்புடையீர்.
வணக்கங்கள்.4ம் தேதி நண்பர் முனிரெத்தினம் கல்வி நிலையங்களில் முற்றிலுமாக இருந்தேன்.
மறு நாள் வழக்கம்போல எனது பிள்ளைகள் திரைப் படப் பாடலாசிரியர்கள் பழனி பாரதி
நந்தலாலாவும் தம்பி நெல்லை ஜெயந்தாவும் சிறந்த புகைப்படக் கலைஞர் க்ளிக் ரவியும் வந்தி
ருந்தனர். அத்தனைக்கும் மேலாக அண்ணன் இலக்கிய வீதி இனியவன் அவர்கள் வந்திருந்தார்.

மாலையில் பொதிகைத்தொலைக் காட்சிக்கு காலை நேர நிகழ்ச்சிக்காக தம்பி இராஜேந்திரன்
நண்பர் சாமி.நண்பர் வீரபாகு.நண்பர் இளங்கோ.நண்பர் சுந்தரம் ஆகியோர் நான் தங்கியிருந்த
நியு உட்லண்ட்ஸ் விடுதிக்கு வந்து படம் பிடித்துச் சென்றனர்.

அன்று இரவு புறப்பட்டு நெல்லை வந்தேன்.6 ம் தேதி காலை நெல்லையில் உள்ள வ.உ.சி.
மணி மண்டபத்தில் வ..உ.சி.அவர்களுக்கு உலக வரலாற்றிலேயே எவருக்கும் தரப் படாத மிகக்
கொடுமையான தண்டனையை( 40 ஆண்டுகள்) வெள்ளை நீதிபதி பின்கே வழங்கிய நூறாவது ஆண்டின் நினைவாக
எனது பிள்ளை ஒவியர் வள்ளி நாயகத்தின் ஒவியக் கண்காட்சி சிறப்புற நடந்தது.பெரியவர்
உயர் திரு தி.க.சிவசங்கரன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.பேராசிரியர்கள் ஆ.சிவசுப்பிரமணியம்.தொ.பரமசிவம் மாணிக்கம்.கவிஞர் அண்ணன் இளசை அருணா இளசை
மணியன் வ.உ.சியின் வழித் தோன்றல்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.இறுதியில் நான்
சிறப்புரையாற்றினேன். அன்று இரவே காரைக்குடி சென்று தங்கினேன்.7ம் தேதி உழைப்பால்
மட்டுமே உயர்ந்த பெரியவர் வைரம் வடிவேல் செட்டியார் அவர்களின் எண்பதாவது ஆண்டு
நிறைவு விழாவில் கலந்து கொண்டு தமிழால் வாழ்வோம் என்ற தலைப்பினில் பேசினேன்.
தமிழ் வளர்க்கும் நகரத்தார்கள் சுவைத்துப் பாராட்டினர்.நான்கு தினங்களாக வலைப் பூவில் நான்
எழுதாத காரணம் இதுவே.பொறுத்துக் கொள்ள வேண்டுகின்றேன்.நன்றி
தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ணன்

0 மறுமொழிகள்: