Saturday, July 12, 2008

பழம் பாடல் நாலடியார்

     பல்வேறு நிறத்தில் பசுக்கள் உண்டு

       பால் மட்டும் வெள்ளை நிறம் அதனைப் போல

    நல்லவரின் செயல்கள் வேறு வேறாய்

        நமக்கிங்கே தோன்றிடினும் செயல்கள் எல்லாம்

  வல்லமையைத் தரும் அறமே ஆகும் இங்கே

       வடிவங்கள் வெவ்வேறாய் இருந்த போதும்

  அல்லதையே வேரறுத்து நன்மை வழி

      அறங்களையே செய்திடுவீர்  பல வழியில்

                                      நாலடியார்

  ஆ வேறுருவின ஆயினும் ஆபயந்த

  பால் வேறுருவின வல்லவாம் -பால் போல்

  ஒருதன்மைத் தாகும் அறநெறி. ஆ போல்

  உருவு பலகொளல் ஈங்கு

0 மறுமொழிகள்: