Wednesday, July 16, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

 

     மாற்றிக் கொள்ள நினைந்தானா அவன் தன் நெஞ்சை

           மயக்குகின்ற வேலை மட்டும் செய்த மகன்

   ஆற்றிக்  கொள்ள வழியின்றி அவன் நினைவில்

           அரற்றுவதும் பிதற்றுவதும்  மீண்டும் மீண்டும்

   தேற்றுதற்கு ஆளின்றித் தவிப்பதுவும்

           தினம் வேண்டாம் சொல்வதை நீ கேட்பாய் நெஞ்சே

 மாற்றமின்றி என்னிடமே இருந்திடு    நீ அவன்

          மயக்கு நெஞ்சு அவனிடத்தே இருந்தால்  போல

                                               குறள்

    அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே

   நீ எமக்கு ஆகாதது

0 மறுமொழிகள்: