Saturday, July 12, 2008

வாழுகின்றேன்

   காலையிலே குயில் ஒன்றின்   அன்பதனால்  எழுந்திடுவேன்

        கலகலக்கும் குருவிகளின் கானத்தோ டிணைந்திடுவேன்

   சாலையிலே வண்டிகளின் சத்தமது  கேட்கும் முன்னர்

        சரியாக தேவாரப் பண்ணிசையில் எனை மறப்பேன்

  வேலை பின்னர் சரியான உடற் பயிற்சி  அதன் பின்னர்

        விரைந்து வந்து  கணிப்  பொறியில்  கவிதைகளை எழுதிடுவேன் 

 நாளை என்றல் நம்மிடமா ஒரு நாளும்  இல்லை அந்த

         நாயகனின்  கையிலன்றோ உணர்ந்தே  தான் வாழுகின்றேன்

0 மறுமொழிகள்: