Wednesday, July 9, 2008

அருள்க அய்யா

உடலாலே குறைவு கொண்டோர் தம்மைக் கண்டு
உயிர் பதைத்துப் போகின்றது இறைவன் மேலே
பலவாகக் கோபமதும் வருகிறது
பார்க்கையிலே துன்பமதோ கொல்கிறது
தலைவா உம் பிள்ளைகளில் இவரை மட்டும்
தனியாக்கிப் படுத்துவது நியாயம் தானா
இலை அய்யா இத்துன்பம் எங்களையே
இடர்ப் பாடாய்த் தனியாகக் கொல்கிறது


வினையென்ன காரணம் தான் என்ன என்று
விரிகின்ற பல கேள்வி எமக்கு உண்டு
தலைவா உன் அரசாங்க எல்லைக்குள்ளே
தனியார்க்கு அனுமதியே இல்லை என்ற
நினைவுண்டு எமக்கெல்லாம் என்ற போதும்
நீயளித்த நெஞ்சே தான் கேட்குதிங்கே
குலைவில்லா நல் வாழ்க்கை அனைவருக்கும்
கொண்டளிக்க வேண்டுகின்றேன் அருள்க அய்யா

0 மறுமொழிகள்: