Monday, May 5, 2008

வண்டமிழின் தன் மகனார்

     தமிழனுக்குப்  பொறந்தவந் தான் இங்கிலீஷு
          தட தடன்னு  பேசுனானா  அசந்தே போனேன்
     அமிழ்தம்  நம்ம  தமிழுன்னு  நாமக்கல்லார்
          அன்னிக்குச்  சொன்னதெல்லாம்  நெனச்சுக் கிட்டேன்
     உமிழ் நீரில்  பால்  சேர்த்து  அவங்க ஆத்தா
           ஊட்டையிலே தமிழுந்தான்  ஊட்டிருப்பா
     கமழ்கின்ற தமிழ் விட்டு  இங்கிலீஷிலே
           கதைச்சாத்தான்  பெருமையின்னு இவன் நெனைக்கான்

     தெலுங்கினிலே  பேசிக்கிட்டு  இருவர்  போனா
           தெளிவா நான்  தெரிஞ்சிடுவேன்  தெலுங்கருன்னு
     துளுவினிலே பேசிக்கிட்டு இருவர் போனா
           சுளுவா நான்  தெரிஞ்சுக்குவேன் துளுவருன்னு
     கொழு கொழுன்னு மலையாளம்  பேசிப் போனா
           கொண்டிடுவேன்  மலையாள நண்பர்  என்று
     வழு வழுன்னு  ஆங்கிலத்தில் பேசி நின்றால்
           வண்டமிழின் தன் மகனார்  என்றுணர்வேன்

0 மறுமொழிகள்: