Sunday, May 25, 2008

என் அண்ணன்

            எழுதி விட்ட  கவிதைகளை  உடனுக்குடன்
                        என் அண்ணன்  முகிலனிடம்  சொல்லிடுவேன்
            களி கொண்டு  அவர்  ஆடும்  ஆட்டம்  தன்னை
                        கை பேசி  வழியாகக் கண்டு கொள்வேன
            தொழுது  நிற்பேன்  இவ்வன்பை  எனக்களித்த
                        தோன்றாத துணையான  இறைவன்  தன்னை
             பழுதில்லா  இவர்  அன்பே  என்னை  மேலும்
                         பல  ஆண்டு  உயிரோடே  வாழச் செய்யும்


            குடந்தை  பெற்ற  பெருஞ் செல்வம்  எங்கள்  அண்ணன்
                         குளிர்  தமிழின்  வளர்  தமிழின் கொற்றம்  காண்பீர்
            மடந்தை  தமிழ் பெற்றெடுத்த ம  பொ  சி  யாம்
                         மாபெரிய  தமிழ்  அறிஞர்க் குற்ற   பிள்ளை
            இடந் தெரிந்து  அன்னை  தமிழ்  இவரிடத்தில்
                         எனைக்  கொண்டு  சேர்த்தாளே  என்ன  சொல்வேன்
            கடன்  பெற்றேன்  இவர் பிள்ளை  தன்னிடத்தும்
                          கைம்மாறு  என்ன செய்வேன்  புரிந்தேன் இல்லை

1 மறுமொழிகள்:

said...

குடந்தை பெற்ற பெருஞ்செல்வம் குணக்கடலாம் மபொசி மகன்
அவர் பெற்ற அரும்பிள்ளை தான் புதுக்கோட்டை வந்தவனோ
எப்படியோ எமக்கெல்லாம் இனியதமிழ் விருந்திங்கு
நிதம் படைத்து மகிழ்[க்]கின்றாய் கடலே வாழி!