Wednesday, May 21, 2008

பழம் பாடல் புதுக் கவிதை முத்தொள்ளாயிரம்

            ஆண்டு  நிற்கும் சோழனவன்  அரச  குலத்தானை
                     அவனியெல்லாம்  வெல்லுதற்கு பழகி  நின்ற ஆனை
            தாண்டி  அது  போர்க் களத்தில்   பாய்ந்து  வரும்  நேரம்
                      தலைகளோடு குடல்களுமே  துண்டாகிப் போகும்
            வேண்டி  அதைப்  பணிந்து  நின்றால்  பிழைத்தார்கள்  இல்லை
                      விரைவாக  உடலழிந்து உயிரிழப்பார்  கண்டீர்
             காண்பதற்கு  அதைப்  போன்ற  களிறு  ஒன்று  இல்லை
                       கை தொழுது  நிற்பார்கள்  நாட்டிலுள்ள நல்லோர்


             பவனியிலே  அது  அசையும்  கம்பீரம்  கண்டு
                       பார்ப்பவர்கள்  அனைவருமே மெய்  சிலிர்த்து நிற்பார்
             அவதி  அது  தந்த  தங்கு  பாகர்களுக  கன்று
                       அரசனது  பவனிக்கு  வர  மாட்டேனென்று
             புதிது  இது  பாகருமே  புரியாமல்  நின்றார்
                        புலவருக்கோ  புரிந்த  திது   புனனகைத்துச் செனறார்
             அரிதான  இச்செய்தி   மனதினிலே  கொண்டு
                        அரசற்குச் சொல்வதற்கு  அரண்மனைக்குள் சென்றார்


             போரினிலே  பகை  மன்னர்  கோட்டைகளின்  கதவை
                         பொறுப்பாக  தந்தத்தால்  பேர்த்தெடுத்த  போது
              சீர்  கெட்டுப்  போன  அந்தத்  தந்தத்தினோடும்
                          சிரங்களையே  கால்களினால் துவைத்தெடுத்த  போது்
               பேர்  பெற்ற  பாதங்கள்  நகமழிந்து  போக 
                           பெண்  ஆனை  முன்னாலே  வருவதற்கு வெட்கி
                ஊர் கோலம்  வருவதற்கு   மறுத்தங்கு   ஆனை
                             உள்ளதென்ற  உண்மையினை உவப்போடு  சொன்னார்


                            முத்தொள்ளாயிரம்


           கொடி மதில்  பாய்ந்திற்ற  கோடும் அரசர்
            முடியிடறித்  தேய்ந்த  ந்கமும்-பிடி முன்பு
            பொல்லாமை நாணிப்  புறங்கடை  நின்றதே
            கல்லார்தோட்  கிள்ளி  களிறு
             

0 மறுமொழிகள்: