Tuesday, May 20, 2008

சாதியினை ஒழித்தார்

         காந்தியவர்  ஆசிரமம்  காலை வேளை
                 கவனமற்ற  துயரம்  ஒன்று  மாறும்  காலை
         ஏந்தி  ஒரு மலச சட்டி  தலையில்  கொண்டு
                 ஏலாத இளஞ் சிறுவன்  நடந்து  வந்தான்
          சாந்தி  கொண்ட அம் மனிதர் பிராம்மணர்தான்
                 சட்டென்று   அச்சிறுவன்  தனை  நிறுத்தி
          வாங்கி  அந்த  மலச் சட்டி  தலையில் கொண்டார்
                 வார்தாவே  தனை  உணர்ந்து  மாறி  நிற்க


          காந்தியவர்  கை  கூப்பித்  தொழுது  நின்றார்
                  கருணையதை  உணர்த்தி நின்ற  கண்ணியரை
          ஆம்  தினமும்  ஆசிரமம்  தன்னில்  உள்ளோர்
                  அள்ள  வேண்டும் மலம் என்றும் ஆணையிட்டார்
          காந்திக்கே  குரு அவர்தான்  என்றும்  சொன்னார்
                   கனிவுக்கே  தாயான  வினோபா தன்னை
          போந்தவரைப்  போற்றி  நிற்போம் மலத்தை  அள்ளல்
                   பொது என்று  சாதியினை  ஒழித்தார் தம்மை

0 மறுமொழிகள்: