Wednesday, May 7, 2008

வள்ளுவரே காக்க வேண்டும்

     குடியென்னும்  பேரரக்கன்  ஏழையர்தம்
          குடும்பத்தை  வேரறுத்தல்  ஒன்றே செய்வான்
     அடிக்கு மேல்  அடி தந்து  அவர்கள்  தம்மை
          அழ வைத்தும் தொழ வைத்தும் அழித்தொழிப்பான்
     வடிவாக  வள்ளுவர்க்குச் சிலைகள்  வைப்பார் அவர்
          வழி மட்டும் ஒரு  நாளும்  நினைவில்  வையார்
     அடி நாதமாக  அவர்  வழியைக்  கொண்டால
          அதன் பின்னர் தமி  ழருக்கு வீழ்ச்சியில்லை



     பெற்ற மகன் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும
          பேரருளின்  அன்னையவர்  முகம் சுளித்தல்
     கற்றவரும்  பெரியவரும்  விலகிச் செல்லல்
          கண்ணியத்தார்  எண்ணி எண்ணிக்  கவலை  கொள்ளல
     மற்றவரோ  சொல்லுதற்கு   அஞ்சி நிற்ற்ல் 
          மனைவி மக்கள் அன்றாடம் உயிர்  துறத்தல்
     சொற்றமிழில்  வள்ளுவரும்  சொல்லி வைத்தார்
          சோகங்கள்  தீர்ப்பதற்கு  யார்  நினைந்தார்


     ஏழையர்தாம்  அழிகின்றார்  பணம்  படைத்தார்
          ஏற்றங்கள்  பெறுகின்றார்  குடியின் மூலம்
     கோழைகள்  போல்  வணிகங்கள்  கொள்வதற்கும்
          கொள்ளை  லாபம்  அடிப்பதற்கும் குடியைக் கொண்டே
     பேழைகளை நிரப்புதற்கும்  வழிகள்  கண்டு
          பெரும் பெரிய்  விடுதிகளில்  கூட்டம்  சேர்த்து
     வாழையடி  வாழையென  இந்த  நாட்டின்
          வளம் ஒழித்து  குலம் கெடுத்து  வெல்லுகின்றார்

     வாக்களிக்கும்  கூட்ட்மென  ஏழையரை  
          வகைப் படுத்தி   வைத்து உள்ளார அவர்கள்  தம்மைப்
     போக்கொழிந்த  நிலையினிலே  வைத்தால் தானே
          போர்க்குணங்கள்  இல்லாத அடிமையாவார்
     யார்க்கு  வரும்  இவ்வினிய  ந்ல்ல  நோக்கு
          எம்  தமிழர்  திரு நாட்டில்  அன்றி  வேறு
     பார்க்கின்றோம்  சொல்கின்றோம்  அழுதழுது
          பதைக்கின்றோம்  வள்ளுவரே  காக்க  வேண்டும் 
     
          


     

0 மறுமொழிகள்: