Saturday, May 24, 2008

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

            காதல்  வசப் பட்டாலே  பேசுதலில்
                  கணக்கில்லை  வழக்கில்லை  நேரமில்லை
            பாதகமேயில்  லாமல்  யாரிடத்தும்
                  பகன்றிடுவார்  தம்  உள்ளத  தெண்ணமெல்லாம்
            ஆதரவு  தேடுகின்றாள்  ஆசைப் பெண்ணாள்
                  யாரிடத்து  என்பதிலே தான்  புலவர் நின்றார்
             மாதவத்தான்  பாண்டியனின்  குதிரையோடு
                  மங்கை நல்லாள்  பேசுகின்றாள்  வேண்டுதல்தான்



             புகழ்ந்து  பின்னர்  வேண்டினால் தான்  நலம்  விளையும்
                   புரிந்தவளாய்ப்  பேசுகின்றாள  மங்கை  நல்லாள்
             அகம்  நிறைந்த  முகம்  காட்டிப்  பேசுகின்றாள்
                   அறிவாக  தெளிவாக  ஆர்வமாகப்
              புகழ்  உன்னால்  பாண்டியர்க்கு  போர்க்  களத்தில
                    புலவரெல்லாம் உனைத்தானே  பாடுகின்றார்
              தகும்  அங்கு  காட்டுகின்ற  வேகமெல்லாம
                    தரணி  வெல்லப்  போர்க்களத்தில் - ஊருக்குள்ளே


              கதவிற்குப் பின்னாலே  நின்றவனைக்
                    கண்டு  வாழக்  காத்திருக்கும் எனக்கு எல்லாம
              இதம்  செய்ய  வேண்டாமா  கொஞ்சம்  எண்ணு
                    எல்லாமே  போர்க் களமா மெல்லச்  செல்லு
              வதம் செய்ய  நாங்கள்  என்ன  எதிரிகளா
                    வடிவழகே  மெதுவாய்  நீ  நடத்தல்  ஒன்றே
               பதம்  செய்யும்  எங்களையே  பாண்டியனைப்
                     பார்த்திடுவோம்  உயிர் வாழ்வோம் நன்மை செய்க


                                        செய்யுள்

              போரகத்துப்  பாயு  மா  பாயாது  ஒரு படியா
              ஊரகத்து  மெல்ல  நடவாயோ-பார
              மத வெங் களியானை  மாறன்  தன்  மார்பம்
              கதவங் கொண்டு  யாமும்  தொழ
              

0 மறுமொழிகள்: