Saturday, May 17, 2008

பழம் பாடல் புதுக்கவிதை ஆண்டாள்

          அழுகின்றேன்  தொழுகின்றேன்   என்ற போதும்
                       அருகில்  வந்து  அரவணைத்து அன்பு செய்து
          பழுதின்றி  அஞ்சாதே   எந்தன்  கண்ணே
                        பார்வையெல்லாம்  உன் மேலே  என்றே  சொல்லி
          வழுவில்லா  என்  காதல்  தன்னை  ஏற்று
                        வாயமுதம்  தந்து  என்னை  ஆதரித்து
           கழுவாயைத் தீராமல்  மீண்டும்  ஏய்க்கும்
                         கண்ணனது கொடுமைகளை  அறிவீரோ    நீர்



           இருந்தாலும்  தினம்  வந்து  என்னைச் சுற்றி
                          இழுத்தணைத்து  என் மார்பை  இடையை நல்ல
           விருந்தாகிக் கொள்கின்றான்  என்றாற் போல்
                           விதம் விதமாய்  நானாக  எண்ணிக் கொள்வேன்
          மருந்தாகும் அவன்  வாயின்  அமுதம்  தன்னை
                            மன்னன்  அவன்  வாய்க் குழலே  கொள்ளை  கொள்ளும
           அருந்தாத அவன்  வாயின் எச்சில்  தன்னை
                            அக்குழலில்  இருந்தெடுத்து  முகத்தில  பூசும்


           கனி வாயின்  எச்சில்  ஒன்றே  தனக்குள் உள்ள
                             காம  வெறி  அத்தனைக்கும் தீர்வேயாகும்
           எனச் சொல்லி  வேண்டுகின்றாள்  ஆண்டாள் ஆங்கே
                              எப்போதும்  துணை  நிற்கும்  தோழியிடம்
           தனிப்பாடல்  இப் பாடல்  ஆண்டாள்  எனும
                               தங்க மகள்  தன்  மொழியில்  தந்த  பாடல்
           இனிப்பான  இப்பாடல்  தன்னைக்  கொள்ள
                               என்ன  தவம்  செய்தானோ  கண்ணன்  அன்று



                                                        செய்யுள்

                         அழிலும்  தொழிலும்  உருக்காட்டான்
                                   அஞ்சேல்  என்னான்  அவன்  ஒருவன்
                          தழுவி முழுகிப் புகுந்தென்னைச்
                                    சுற்றிச்  சுழன்று  போகானால்
                          தழையின்  பொழில்  வாய்  நிரைப்பின்னே
                                     நெடுமால்  ஊதி வருகின்ற
                          குழலின்  தொளைவாய்  நீர்  கொண்டு
                                      குளிர் முகத்துத் தடவீரே
 
           

            

1 மறுமொழிகள்:

said...

கண்ணனின் எச்சில் கேட்டு
காரிகையிவள் பாடி நின்றாள் - நெல்லை
கண்ணனின் தமிழச்சில்
மயங்கி நின்றேன் யானும்!

தொடரட்டும் தமிழ்ப்பணி!