Tuesday, May 20, 2008

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

              பாண்டியன்  வருகின்றான்  வீதி வழியாய்
                          பாய்ந்தோடும்  குதிரையில்தான்  மிக  விரைவாய்
              காண்பாள்  தன்  மகள்  பின்னர்  துன்பம்  நேரும்
                          கணக்கிட்ட  தாய  வளும் கதவடைத்தாள்
              வான்  பார்த்த  பயிர்   போல  பாண்டியனின்
                          வரவிற்க்காய்க்  காத்திருந்தாள்     பதறி நின்றாள்
               தானவளை  அடைத்து வைத்த  காரணத்தால்
                           தாயவளோ மகிழ்ந்திருந்தாள்  காவல்  தன்னில்



               பாண்டியனும்  போன பின்னர்  தாயும்  வந்து்
                            பக்குவமாய்க்  கதவினையே திறந்து வைத்தாள்
               தூண்டில்  இட்ட  மீன்  போல்  பெண்ணோ  அங்கு
                            துடித்திருப்பாள்  என்றவளோ  அதிர்ந்து  நின்றாள்
               பாண்டியனைப்  பார்த்தவளாய்  மகிழ்ச்சியோடு
                             பாவை யவள்   பாடி நிற்க வியந்து  நின்றாள்
               காண்பதற்கு  வழி ஏது  என்று அன்னை
                             கவனிக்கக்  கதவினையே  காட்டி  நின்றாள்


                சாவிக்காய்  உண்டான  பெருந  தொளையில
                             சரித்திரத்துப்  பாண்டியனைப்  பார்த்து  விட்டாள்
                ஆவியினைக்  காப்பதற்காய்  தொளையைப்  போட்ட
                             அப்பெரிய  நல்லவர்க்கு என்ன   செய்வேன்
                சாவிக்காய் போட்ட  தொளை  இவளுக் கென்றே
                             சரியாகப் போட்டதாகக்  கருதுகின்றாள
                தேவி   அந்தப்  பெரியவர்க்கு  நன்றி  சொல்லத்
                             தேடுகின்றாள் கைம்மாற்றுக் கடனைத் தீர்க்க


                                             முத்தொள்ளாயிரம்

                     காப்படங்கென்றன்னை  கடிமனை  இல்ச்செறிந்து
                     யாப்படங்க  ஒடி  அடைத்த பின்  -  மாக்கடுங்கோன்
                     நன்னலம்  காணக்  கதவம்  தொளை  தொட்டார்க்கு
                     என்னை  கொல்  கைம்மாறு  இனி

0 மறுமொழிகள்: