Monday, May 12, 2008

பழம் பாடல் புதுக்கவிதை ஆண்டாள்

         கண்ணனை  எண்ணி  எண்ணிக்  களித்தலுக்  காளேயாகி
                     எண்ணிய  எண்ணம தன்னால்  இளைத்தங்கு  மயக்கமாகி
         புண்ணியம் செய்த ஆண்டாள்  பூவுடல்  தளர்தல்  கண்டு
                      கன்னியர்  எல்லாம்  கூடிக் களி மயில்த் தோகை கொண்டு
         பொன்னுடல்  துன்பம்  தீரப்  பூப்போல  வீசி  நின்றார்
                       என்ன  நீர்  செய்தீர்  அய்யோ இதனாலா மயக்கம்  தீரும்
         மன்னவன் இடுப்பின்  பட்டில்  மாலவன்  வாடை  உண்டு
                        அன்னவன்  இடுப்பின் பட்டை  அவிழ்த்திங்கு வீசுவீரே


         பெண்ணாளின்  உள்ளம்  காணாப் பெருந்தகையாளன்   தன்னால்
                         கண்ணாளா   என றழைத்தும் காணாமல் மயக்கமானேன்
          நன்னாரி  வேரைக் கொண்டு  நல்லதோர்  விசிறி  செய்து
                         என்னதான்  வீசினாலும் எப்படி மயக்கம்  தீரும்
          பெண்ணாரே  அவன் இடுப்பில்  பேணலால்ச் சேர்ந்த பட்டு
                         தன்னாலே வீசினால்தான்  தளிர்க் கொடி நானும்  வாழ்வேன்
          என்றாளே  ஆண்டாள்  அந்த  ஏக்கத்தைப்  பாட்டும்  ஆக்கித்
                         தந்தாள் காண்  படித்துப் பாரும் தமிழாளின் இனிமை  தன்னை


                                                ஆண்டாள்

         கண்ணன்  என்னும் பெருந்தெய்வம்  காட்சி பழகிக் கிடப்பேனை
         புண்ணிற் புளிப் பெய்தாற் போல  புறம்  நின்றழகு பேசாமே
         பெண்ணின்  வருத்தம்  அறியாத    பெம்மான்  அரையின் பீதக
         வண்ண  ஆடை கொண்டென்னை  வாட்ம்  தணிய வீசீரே

1 மறுமொழிகள்:

said...

நல்லாயிருக்கு.