Thursday, May 22, 2008

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

           தெங்கிள நீர்  மார்பகத்துப் பெண்ணாளவள்
                     சேர்ந்து  விட்டாள்  பாண்டியனைக்    கண்ட  அன்றே
            மங்கையவள் மனத்திற்குள்  பாண்டியனார
                      மகிழ்ச்சி மிகக் கொண்டிருந்தும் நேரில்   காணாச
           சங்கடங்கள்  சில  நேரம்  வருவதுண்டு
                      சதி செய்து அன்னை  யவள்  தடுக்கும்  நேரம்
          இங்கவளும்  சொல்லுகின்றாள்  அன்னை  யவள்
                      ஏமாந்து நிற்கின்ற  செய்தி  தன்னை


           கதவடைத்து வைப்பாளாம் அங்கும்  இங்கும்
                      காவலுக்கு  நிற்பாளாம்  பெற்ற பெண்ணை
           நிதம்  அடைத்து  வைப்பதையே  நீட்டிப்பாளாம்
                      நெஞ்சு  அவன்  பின்னாலே  சென்று  விட்ட
           விதம்   அறியா  மடமையிலே  காடை தன்னை
                       வேடர்களும்  கூடிட்டு  மூடி  வைக்க
            இதமாகக் கீழிருக்கும்  மண் பறித்து
                         எப்போதோ  காடையது  பறந்தாற்  போல
                       
                                      முத்தொள்ளாயிரம்


                  கோத்தெங்கு  சூழ் கூடல்  கோமானைக் கூட என
                  வேட்ட்டங்க்குச் சென்ற  என்  நெஞ்சறியாள்-கூட்டே
                   குறும்பூழ்  பறப்பித்த  வேட்டுவன் போல்  அன்னை
                    வெறுங்கூடு  காவல்  கொண்டாள்      
         

0 மறுமொழிகள்: