Sunday, May 4, 2008

தனியாய்த் தெய்வம் வேறே வேண்டாம்

     தந்தையைத்  தாயை  வணங்குதல்  போதும்
          தனியாய்த் தெய்வம்  வணங்குதல்  வேண்டாம்
     முந்தியே நமக்கு  அவ்வை  அன்னை
          முறையாய்ச்  சொன்னாள்  நல் வழி  இதனை
     சந்ததி  தமக்கு  உணர்த்திட  நாமே
          சரியாய்க் கொண்டால்  உலகே வெல்லும்
     வந்தனம்  செய்வீர்  தந்தையைத்  தாயை
          வளமாய்  வாழும் உளமே  தானே
     

1 மறுமொழிகள்:

said...

பாடல் நன்றாக இருக்கிறது.

//சரியாய் நடத்தல் ந்ன்மை விளைக்கும//

சில ஒற்றுப் பிழைகள் இருக்கின்றன, சரி செய்துவிடுங்கள் :)