Tuesday, May 27, 2008

உதவுங்கள்

                      பெற்ற  தாய்க்குச்  சோறு  போட  விருப்பமின்றி
                                     பேணுதற்கு மனமின்றி வாழும்  மாந்தர்
                       உற்றவர்க்கோ  ஊரார்க்கோ  உதவியேதும்
                                      ஒரு போதும் செய்யாத  பண்பின்  வேந்தர்
                       கற்றவர்க்கோ  கலைகளுக்கோ  ஈயா அன்பர்
                                       கையெடுத்து  எவரையுமே  வணங்கா மெய்யர்
                       மற்றவரை  எண்ணாமல்  தன்னை  மட்டும்
                                  மனத்தினிலே  கொண்டு  வாழும  மனிதர்  என்பார்


                      கற்றவர் போல்  சபைகளிலே  காட்டிக்  கொள்ள
                                        கையூட்டுப்  பெற்றவர்கள்  வசதி செய்வார
                      மற்றவர்   முன்  அவர்  போடும்  வேடம்  கண்டால்
                                         மனிதரென  வாழ்பவர்கள்  அவதி  கொள்வார்
                      பற்றற்ற  மனிதரைப்  போல்  கோயிலுக்குள்  அவர்
                                          பக்தி   வேடம்  போடையிலே    இறைவன்  செல்வார்
                      கற்றவரோ  ஒரு போதும்    போலியான   இந்தக்
                                          கயவர்களை  மனிதரென்று  கொள்ள  மாட்டார


                     
                     உற்றவர்க்கு  உதவுங்கள்  உறவை  யெல்லாம
                                         உயர்  நட்பாய்க்  கொள்ளுங்கள்  நட்பையெல்லாம்
                     மற்றவர் போல்  எண்ணாமல்  உறவாய்   மாற்றி
                                         மனிதரென   வாழுங்கள்  இறைவன்  உங்கள்
                     முற்றத்தில்  என்றென்றும்  காத்திருப்பான் அந்த
                                         மூலப்  பொருள்  உங்களையே  பார்த்திருப்பான்
                      கற்றல்  என்றால்  இது  ஒன்றே   கற்றல்  ஆகும்
                                          கனிந்திடுவீர்  அன்பு கொண்டே  பணிந்திடுவீர்

1 மறுமொழிகள்:

said...

அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு
இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்

என்னும் பாரதி வரிகள் நினைவுக்கு வந்தன.