Sunday, May 18, 2008

திறனே கொள்வோம்

             தாய் தந்தை  தமை  நாமே  தேர்ந்தெடுத்து
                       தனியாகவா பிறந்தோம் இங்கே  வந்து
             ஊன் தந்த உடல்  கொண்ட  உணர்வதனால்
                       உறவானார்  இருபேரும்  உருவானோம்  நாம
              ஏன் பெற்றீர்  எனக்  கேட்க  இடமுமில்லை
                       எத்தனை  நாள்  வாழ்க்கை  என்ற கணக்குமில்லை
              தேன்  கொண்ட வார்த்தை  கொண்டு  இல்லார்க்கெல்லாம்
                         தெரிந்த  வரை உதவி வாழ்வின் திறனே கொள்வோம்

0 மறுமொழிகள்: