Sunday, May 11, 2008

அடிகளார்

      மடங்கள்  என்றால்  பல்லக்கு  கவரி வீச்சு
           மடமைகளைப் போதித்தல்  என்றிருந்த
      தடங்களையே  மாற்றி நின்றார்  எங்கள்  தந்தை
           தமிழுக்கும்  ஏழைக்கும்  தன்னைத் தந்தார்
      குடம்  குடமாய்ப் பால்  கொட்டி ஆண்டவனைக்
           குளிர்விக்க  நினைத்தாரைக் கண்டு  நொந்தார
      திட மனதால்  ஆண்டவர்க்குச் செய்யும்  பூசை
           திசை  தெரியா  ஏழையர்க்கு  உதவல்  என்றார்

      குமரியிலே  புரியாமல்  மதத்தின்  பேரால்
           குத்து வெட்டு கொலை என்றும்னிதம் வீழ
      அமைதியினை நிலை  நாட்ட  அங்கே சென்றார்
            அடிகளவர்  சேவையினால்  மனிதர்  சேர
      இமயம் முதல்  குமரி வரை  இதயம்  தோறும்
             இருக்கின்ற  காந்தி யண்ணல்  தமக்குப் பின்னே
      குமையும்  ரத்தக் களறிக்குள்  ஒருவர்  சென்றார்
             குன்றக்குடித் தந்தையவர்  சிவனின் பிள்ளை


      உமையவளின்  பிள்ளை  குன்றக் குமரனவன்
             உடன் இருக்க  ஞான  வடிவாகி நின்றார
      தமிழவளின்  துணையிருக்க  நல்லோர்  எல்லாம்
             தன் துணையாய்க்  கொண்டவரும் சேவை செய்தார்
      அமிழ வைக்கும்  குடி திரைக் கூத்து  எல்லாம்
             அண்டாமல்  அவ்வூரைக் காத்து நின்றார்
      கமழ  வைக்கும் சங்க காலப் பட்டிமன்றம்
              கருத்திற்காய்  நாடெங்கும் நடத்தி நின்றார்


      மடமையினை  எதிர்த்து நின்ற பெரியார்  தன்னை
              மடத்துக்கு  அழைத்து  வ்ந்தார் அவரும் வந்தார்
      கடமையினை  நனறாக உண்ர்ந்தாராகி
              கனித்தமிழாள்  குறளுக்கு  அவையும்  கண்டார்
      தடமதனில்  செல்லாமல்   மீண்டும்  நாம்தான்
              தடம்  மாறிச் செல்கின்றோம்  தந்தையவர்
      திட மனதைக் கொள்வீரே குன்றக்குடித்
               திருத் தமிழை ஏழையரைப் போற்றுவீரே
      

4 மறுமொழிகள்:

said...

திருக்குறளே தமிழர் மறை
தினமவர் சொன்ன உரை
தடம் மாறித் தமிழர் செல
தமிழ் வழியில் பாடம் சொல்லி
தரணி வாழ் தமிழர் அவர்
சொன்ன வழி தமிழ்ராவோம்!

said...
This comment has been removed by the author.
said...

குன்றக்குடி அடிகளாரின் நற்குணத்தை
குறையின்றி கூறி எங்கள் உளம் முழுதும்
வளமான எண்ணங்கள் தோன்றச்செய்து
களையில்லா பயிர்வளர்க்க கற்றுத்தந்த
உங்கள் தமிழுக்கு எங்கள் தாழ் வணக்கம்.

said...

அடிகளாரைப்பற்றி இக்காலத்தலைமுறை விரிவாக தெரிந்து கொள்ள ஒரு கட்டுரைத்தொடர் இணையத்தில் நீங்கள் எழுதவேண்டும்.