Tuesday, May 27, 2008

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரரம்

                   கை வளைகள்  கண்டாயா  என்றன்  தோழி   அவன்
                                   கடல்  விளைந்த   சங்கினம்தான் உணர்ந்தாயா  நீ
                    மெய்யினிலே  மெய்யான  மார்பகத்தில்   நான்
                                    மெய்ம் மறக்க  அணிந்த  அந்த  மாலையதும்
                     பொய்யில்லை  அவன் கடலில்  பிறந்த  முத்து
                                     பொதிகை  மலைச்  சந்தனமே  மேனியெல்லாம
                     அய்யன்  அந்தப்  பாண்டியனின்  உறவே  என்றன்
                                      அழகுக்கு  அழகு  செய்யும் உறவாய்க் கொண்டேன்




                      கொய்த மலர் மாலையினை    அணியக் கூடக்
                                      கொடுப்பினையே  இல்லாமல்  இந்தத்  தோள்கள்
                       அய்யன்  அவன்  தோள்களுக்காய்  மீண்டும்  மீண்டும்
                                       அலை பாய்ந்து  நிற்கிறதோ  புரியவில்லை
                       பொய்யில்லை  அவன்  உடைமை  எல்லாம் இங்கே
                                        பொருந்தி  எந்தன்  மேனியெல்லாம்  அழகு செய்ய
                        அய்ய  இந்த  தோள்கள்  மட்டும்  எதற்குதான்  இங்கே
                                         அடி போட்டு  நிற்கிறதோ  புரியவில்லை


                                                          முத்தொள்ளாயிரம்

                              கையதவன் கடலுள்   சங்கமால் பூண்டதுவும்
                              செய்ய  சங்கீன்ற செழுமுத்தால்  -  மெய்யதுவும
                              பண்பொரு  வேல்  மாறன்  வார்பொதியில்  சந்தனமால்
                              என் பெறா  வாடும்  என்  தோள்

                                         

                                         
                                       

1 மறுமொழிகள்:

said...

எந்த மாலை வந்தாலும்
தன் தலைவன் தோள் மாலைபோல் ஆகுமோ என்றிவள் ஏங்குகிறாள்

சந்தன வண்ணத் தோளினனைச் சேர்ந்திடவே
தையலிவள் வாடுகிறாள்
துயர் தீர்க்க எவர் வருவார்!