Thursday, May 15, 2008

நல்ல வேளை

      சங்க காலப் புலவருக்கும்  வள்ளுவனாம்
             சரியான வழி சொன்ன  தலைவனுக்கும்
      பங்கமில்லாக்  காப்பியத்தின்  இளங்கோவிற்கும
             பாடி நின்ற  பெரும் புலவர்  அனைவருக்கும்
      இங்கு ஒரு வரலாறு  இல்லையென்றே
             ஏக்கங்கள்  கொண்ட்துண்டு  ஒரு காலத்தில்
      தங்க நிகர்  தமிழ்த்  தாயே  காத்து விட்டாள்
              தமிழர்  அவர்  தமிழர்  என  வாழ்வதற்காய்



      பாரதியோ  பார்ப்பான்  அவர் தாசனோரோ
               பள பளக்கும்  துணி  அளிக்கும்  முதலியார் காண்
      ஊரறிய  நாட்டிற்காய் த் தன்னைத் தந்த
               உத்தமராம்  காமராஜர்  நாடாராம்  காண்
      பேர் பெற்று  உலகமெங்கும்  பெருமை  சேர்த்த
                பெரியவராம்  காந்தி மகான்  செட்டியாராம
       கார்  பெற்ற வானுலகம்  சென்ற  பின்னர்
                 காட்டுகின்றார்  அவர் சாதி  தேடித் தேடி



        வரலாறு  இல்லையென்ற  வருத்தம்  நம்மை
                  வாட்டியதோர்  காலம்  போய்  நல்ல வேளை
         தரமாக  அவரெல்லாம்  தமிழரென்றே
                   தான்  கொண்டு  போற்றுகின்ற  பெருமை கொண்டோம்
         வரமாக  வந்துதித்த  அனைவரையும்
                    வழி  மாற்றிச்      சாதி  என்னும்  தீயில்   தள்ளி
         உரமாக்க  நினைக்கின்ற  கொடுமை  தன்னை
                     ஒழித்தே  நாம்  தமிழரென  வாழ்வோம்  நன்கு
                  

1 மறுமொழிகள்:

said...

அத்தனை பெரியவர்களையும் ஜாதிச்சங்க தலைவர்களாக ஆக்கிய கயமைத்தனத்துக்கு சரியான சாட்டையடி!

திருந்துமா சமூகம்?