Thursday, May 8, 2008

பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி

          இடம்  மாறிப்  போகாத  காதலோடு
                    இதயத்தால்  இணைந்திட்ட இருவர்  இங்கு
          தடம்  மாறிப்  போகாத  தங்கள்  காதல்
                     தன்மையினால்  பெருமை கொண்டு வாழ்கின்றாராம்
          நிறம்  மாறிப் போகிறதாம்  அவர்கள்  வாழ்வில்
                     நெகிழ்வாகச்  சொல்லுகின்றான்  கடை  திறப்பில்
          புறம் பாடும்  முன்னாலே  ஜெயஙகொண்டானும்
                     போற்றி  நிற்கும  அகம்  காண்பீர்  காண்பீர்  நீவீர்

          மாலையிலே  துவங்கியதாம்  தழுவல்  அந்த
                      மங்கை ந்ல்லாள் இதழ்  இடையை இணைத்திட்டாளாம்
          காலை வரும்  என்கின்ற் நினைவே  இன்றி
                      களியாட்டம்  தொடர்கிறதாம்  மேலும்  மேலும்
          ஆலையிட்ட  கரும்பாக  இருவருமே
                      அடுத்தவரின் உடல் பிழிந்தே ம்கிழ்கின்றாராம்
          காலை வந்து தொலைத்ததுவாம் என்ன  செய்ய
                       கனி மொழியின்  தோழியர்கள்  வந்து விட்டார்


          வேளையற்ற வேளையிலே  வந்தார்  என்றே
                       வேதனையில்  தோழியரைக் காண வந்தாள்
           பாளையிதழ்ச்  சிவப்பினையே  காணோம்  என்று
                        பதை பதைத்துப்  போனார்கள்  தோழி மார்கள்
           காளை யென்ன  செய்து வைத்தான்  என்ற போதே
                        கணக்ளிலே சிவப்பினையே கண்டு விட்டார்
           பேழையென்னும்  கண்ணிரண்டின்  வெண்மை தன்னை
                        பேர்த்தங்கு  இதழ்களிலே  தந்திருந்தான்

           இரவெங்கும்  விழித்திருந்தால்  கண்கள  எங்கும்
                         எப்போதும் சிவந்து  விடும  இதுதான்  உண்மை
           பருவத்தின்  இதழென்றும்  பவளம்  என்றே  
                         பார்த்திருந்தோம்  அது வெண்மையானதென்ன
           கரு விழிக்குச் சிவப்பளித்து வெண்மைதன்னை
                         கனி இதழும்  பெற்றதனைக் கண்டு  நின்றார்
           தருவதிலும்  பெறுவதிலும்  நிறங்கள்  மாறித்
                         தடம்  மாறும்  அழகினிலே  மயங்கி நின்றார

                                               செய்யுள்

                வாயிற்  சிவப்பை  விழி    வாங்க
                மலர்க் கண் வெளுப்பை வாய் வாங்கத்
                தோயக் கலவி அமுதளிப்பீர்
                துங்கக் க்பாடம்  திறமினோ

0 மறுமொழிகள்: