Tuesday, May 13, 2008

பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி

     விழியிரண்டு் தரும்  வேதனையும்
              விரும்பி  மீண்டும் தரும் ஈதலுமே
     அழிவில் கொண்டு நமை  ஆழ்த்துவதும்
              அதிலிருந்து  நமை  மீட்பதுமாய்
      பழிகள்  செய்தழுதல்  பார்ப்பதுமாய்
               பார்த்து  நன்கு நமைச் சேர்ப்பதுமாய்
      பொழியும் அன்பு செய்து பூப்பதுமாய்
               பூத்தது போல் நமை ஒய்த்ததுமாய


      கழிவிரக்கம்  கொண்டு  வாழ  வைக்கும்
               கண்ணிரண்டும்  கொடு நஞ்செனவே
      பழியைச் சொல்லுதற்கு வாய் திறந்தால்
                பார்க்கும்  பார்வையது  அமுதெனவே
      சுழியக் கடைந்தெடுத்த  பாற் கடலில்
                சுற்றி வந்த விடம் அமுதமென
      விழியிரண்டும் இங்கு பாற்கடலாய
                வினைகள் செய்வதிலே  நாம் இருந்தோம்

      தொழிலில்  சிறந்த இந்த விழிகள்  தரும்
                 தொல்லை இன்பமது கொண்டிருந்தோம்
      அழித்தல் செய்தது  போல்  காத்தல் செய்யும்
                  அவ்விரண்டு  விழி அன்பு கொண்டோம்
      கொழித்த மன்மதனின்  மலர்க் கணை போல்
                  கொல்ல வந்த விழி  நோயாகும்
       அழித்து மீண்டும் ஒரு பார்வையினால்
                   அரவணைக்க வந்த  தாயாகும


                                        செய்யுள்

            கடலில் விடமென அமு(து) எனமதனவேள் 
            கருதி வழிபடு  படையொடு கருதுவார்
            உடலின் உயிரையும் உணர்வையும் நடுவு போய்
            உருவும் மதர் விழி உடையவர் திறமினோ   
  

0 மறுமொழிகள்: