Sunday, May 4, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கலிங்கத்துப் பரணி

   மலை தந்த ம்ழையாலே  விளைந்த  முத்து
          மாலையென  உருக்கொண்டு  மலைகள்  சேர
     சிலையுருவப்  பெண்ணாளின்  சிவந்த  மார்பில
          சேர்ந்த  முத்து மாலையினுக் கிடையே சென்று
     அலை கடலின்  பவளமதும் அவளின் மார்பில
          அணிகலனாய்ச் சேர்த்தானாம்  எவ்வா றென்றால்
     குவியும்  இதழ்  மார்பகத்தில்  குவித்து வைத்து
          கோலமிட்டான்  ப்ற்குறியால்  மார்பகத்தில்


     பதிந்து  விட்ட  பற்களது  சிவந்த  மார்பில்
          பவள  வடம்  போட்டது போல்  அழகு செய்ய
     கனிந்து விட்டாள்  பேரழகி  காதலனின்
          கவிதை  வரி  மார்பினிலே  பவளமாக
     புவியிலிது  போற்  கவிதை  எங்கும்  யாரும்
          புகன்றதுண்டோ  புகன்றீடுவீர்  தமிழினத்தீர்
     கவிதையிது  ஜெயங் கொண்டப்  பெரிய  பாவி
          கலிங்கத்துப்  பரணியிலே  புகன்றதையா


                                                          செய்யுள்

          முத்து  வடம்  சேர்  முகிழ்  முலை மேல்
          முயங்கும்  கொழுநர் ம்ணிச் செவ்வாய்
          வைத்த  பவள வடம்  புனைவீர்
          ம்ணிப் பொற் கபாடம்  திறமினோ
     

0 மறுமொழிகள்: