Monday, March 1, 2010

நி யா ய ம் தா னோ

மக்களாட்சி என்பதனை மறைத்து விட்டு
மன்னரைப் போல் ஆட்சி காட்டும் மானமற்றோர்
தக்கவரும் தகாதவரும் என்று அன்னை
தமிழ் வழியாய்ச் செய்தி தந்த குறள் மறந்தோர்
வெட்கம் மானம் என்பதனை மறந்தும் கூட
வீட்டார்க்குச் சொல்லித் தரா வீணர் இவர்
தக்கவரே அனைவருமே வாயை மூடி
தமிழ் வழியை மறந்திருத்தல் நியாயம் தானோ

0 மறுமொழிகள்: