Tuesday, March 9, 2010

அல்லாவைப் பணிதல் ஒன்றே

எல்லாமே இறைவனென்று உணர்ந்தார் என்றும்
எக்குத் தப்பாய் ஆடி ஆடி அழிய மாட்டார்
அல்லாவே பெரியனென்று உணர்ந்தார் எங்கும்
அழிகின்ற மனிதரினைப் புகழ மாட்டார்
வல்லானை அல்லாவைப் பணிதல் ஒன்றே
வாழ்க்கைக்குத் துணையாகும் பெருமை சேர்க்கும்
நல்லார்கள் உணர்ந்துள்ளார் மற்றவரோ
நலமற்ற மனிதரினைப் புகழுகின்றார்

0 மறுமொழிகள்: