Tuesday, March 9, 2010

இசுலாத்தை போற்றுகின்றேன்

இசுலாத்தைப் போற்றுகின்றேன் எதற்காய் என்றால்
எல்லோரும் இறைவனையே நம்புகின்றார்
பசப்பான வார்த்தை யில்லை பம்மாத் தில்லை
படைத்தவனே அனைத்தும் என்று பணிந்து நின்றார்
நிசந்தான் நான் சொல்லுவது இசுலாமியர்
நினைப்ப தென்றும் இறைவன் என்னும் பேரருளே
வசங் கெட்ட ஒன்றிரண்டு பேர்கள் மட்டும் இங்கே
வகை கெட்டு மனிதரையே புகழுகின்றார்

0 மறுமொழிகள்: