Friday, March 19, 2010

வழி கேட்டுப் போன தீயோர்

வாழ்க்கையை அதன் போக்கினிலே வாழுகின்ற
வழி கண்டு வாழ்ந்தாலே வெற்றி உண்டு
யாக்கை அதன் நிலையாமை அறியாராகி
யாரிடத்தோ சென்று அவர் தமை வணங்கி
போக்க வொண்ணா ஆசைகளைக் கொள்ள எண்ணி
புரியாராய் அவர்களையே துறவியாக்கி
தாக்குகின்றார் இன்று அவர் பொய்யரென்று
தறி கெட்டு வழி கெட்டுப் போன தீயோர்

0 மறுமொழிகள்: