Tuesday, March 16, 2010

திருந்துதற்கு ஏதுவாகும்

பல்கலையில் படித்தோரே படித்ததனால்
பாங்காகப் பதவிகளில் அமர்ந்துள்ளோரே
கல்வி வழி நீங்கள் கற்ற நேர்மையினைக்
கடைப் பிடிக்கத் தொடங்குங்கள் தொடங்கினால் தான்
நல்லவழி நாட்டிற்குத் தெரியலாகும்
நலிந்தோர்கள் வாழ்வதற்கு உதவியாகும்
பொல்லாத அரசியலார் தனை எதிர்த்துப்
போர் தொடுங்கள் படித்தவர்கள் அனைவருமே


எல்லோரும் ஒன்றாகித் தீமைகளை
எதிர்ப்பீர்கள் என்று சொன்னால் பிறகு என்ன
நல்லதெல்லாம் நடக்கும் இங்கே நீங்களே நல்
நாயகர்கள் ஆவீர் இந் நாடு வாழும்
பொல்லாத தீங்கெல்லாம் ஒழிந்து போகும்
பூமியிலே நம் நாடே உயர்ந்ததாகும்
வல்லார்கள் அரசியலை வன்முறையாய்
வகுத்தார்கள் திருந்துதற்கும் ஏதுவாகும்

0 மறுமொழிகள்: