Tuesday, March 23, 2010

மரணம் மேலே

அனுசரித்துப் போகச் சொல்லி நண்பர் பலர்
அறிவுரைகள் சொல்லுகின்றார் அவ்வாறென்றால்
கணிசமாகப் பணம் கிடைக்கும் பதவி கூடக்
கட்டாயம் நமைத் தேடி வீடு வரும்
அணி அணியாய்க் கூட்டமெல்லாம் பேசிடலாம்
அய்யா அய்யா என்றே சுற்றி வருவார்
கணிதம் இதைக் கூறுகின்றார் நானும் சொன்னேன்
கண்ணியத்தை இழத்தல் விட மரணம் மேலே

2 மறுமொழிகள்:

said...

மரானம் மேலே = மரணம் மேலே?
உட்கட்சி பூசல் இல்லாத கட்சி உண்டா?

இங்கு பெங்களூரில் கார்பரேசன் தேர்தல்... எங்கள் ஏரியாவில் இருவர் ( பெரிய ஆட்கள் - பணம், செல்வாக்கு ), காங்கிரசில் நிற்க கேட்டு சீட்டு இல்லாமல் சுயேட்சையாக நிற்கிறார்கள். பாவம், கிருஷ்ணா ரெட்டி. வோட்டுக்கள் பிரியும், அடுத்தபடியாக நிற்கும் ஜே.டி.எஸ் ஆள் ( கோழி கறிக்கடைகாரர் ) வெற்றிபெறும் நிலைமை இருக்கு.

அட்ஜஸ்ட் செய்தால் பார்டி வெல்லும். தனி மனித செல்வாக்கு இங்கே அடிபடுகிறது.

said...

Shabash, Ayya! Manam ilanthu valvathai vida manamudam veelvathu mel! Ayya ungalidam nan kathalikkum panbu athuthan ayya. Neengal Valga Thamizhudan! Pallandu!