Wednesday, March 10, 2010

பெண்ணினமே எதிர்க்கும்

ஓதுக்கீட்டிற்குள் உள்ள ஓதுக்கீட்டைத் தான்
உரிமையுடன் கேட்கின்றார் நியாயம் தானே
கணக்கிட்டு அதனை இன்றே கொடுத்து விட்டால்
கண்ணியமாய்ப் புண்ணியமாய் ஆகிப் போகும்
பிணக் கெதற்கு புரியவில்லை மேதைகளே
பேசாமல் அதைக் கொடுக்க வழியைப் பாரும்
சுணங்கி நின்றால் நீங்கள் செய்யும் துரோகம் தன்னை
சுத்தமாகப் பெண்ணினமே எதிர்க்கும் ஒரு நாள்

0 மறுமொழிகள்: