Wednesday, March 24, 2010

மானமுள்ள எழுத்தாளர்

மாணிக்சந்த் குட்கா தன் மயக்கும் பாக்கை
மனம் போன படி இங்கே விற்றுச் சேர்த்த
கோணிப் பைக் கோடிகளில் சில லட்சத்தை
கொடுத்துள்ளார் மராட்டியத்தில் எழுத்தாளர்க்கு
நாணிப் போய் எழுத்தாளர் சுட்டிக் காட்ட
நல்லவர்கள் அப்பணத்தை திருப்பி விட்டார்
மானமுள்ள எழுத்தாளர் மராட்டியத்தில்
மார் தட்டி நிற்கின்றார் மகிழ்ந்தே போனேன்

0 மறுமொழிகள்: