Thursday, March 4, 2010

இறை உணர்ந்தால்

போதை வழி அனைவரையும் மயக்கும் வேலை
போற்றுகின்றார் கல்கி அவர் ஆசிரமத்தில
பாதை தெரியாப் பலரும் அவர் வழியில்
பரிதாபமாக மாட்டி ஆடுகின்றார்
வேதனைகள் இதுவெல்லாம் மனிதர் தம்மின்
வேண்டாத ஆசைகளால் விளைவதன்றோ
தான் தனியாய்ச் செம்பொருளாய் இருக்கும் இறை
தனை உணர்ந்தால் கேவலங்கள் வருமோ அய்யா

0 மறுமொழிகள்: